News May 23, 2024

சிவகாசி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் லிங்கம் மற்றும் அவருடைய மனைவி ஆசிரியை பழனியம்மாள், மகன், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் 2 வயது பேத்தியை கொன்றதும் தெரியவந்துள்ளது. கடன் தொல்லையால் தற்கொலை என முதற்கட்ட தகவல்.

Similar News

News October 13, 2025

விருதுநகரில் ஒரு வாரத்தில் அகற்ற கெடு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்கம்பங்கள், மின் வாரியத்திற்கு சொந்தமான உடைமைகள் மீது கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள், விளம்பர தட்டிகளால் ஊழியர்களால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. மேலும் இதனால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு வாரத்திற்குள் இவை அனைத்தையும் அகற்ற வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

News October 13, 2025

JUST IN விருதுநகருக்கு கனமழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று(அக்.13) விருதுநகர், மதுரை,தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஒரு வாரம் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளியன்று கனமழை இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT

News October 13, 2025

EXCLUSIVE காரியாபட்டியில் 3145 பேரை கடித்த நாய்கள்

image

தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதில், விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் 01.01.2024 முதல் 31.07.2025 வரை காரியாபட்டி அரசு மருத்துவமனையில் நாய்கடியால் 3145 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

error: Content is protected !!