News October 22, 2025

சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி!

image

சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணசுப்பு மனைவி சின்னம்மாள் (வயது 65). இவர் வீட்டில் உள்ள டியூப்லைட் எரியாத நிலையில் அதனை சரி பார்க்க முயன்ற போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சின்னம்மாளை பரிசோதனை செய்த டாக்டர், சின்னம்மாள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News January 31, 2026

விருதுநகரில் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 31, 2026

விருதுநகர் அருகே பறிபோன 6 உயிர்கள்

image

காரியாபட்டி – நரிக்குடி சாலையில் முடுக்கன்குளம் அருகே எம்.இலுப்பைகுளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பால் வண்டி மோதியதில் சாலை இலுப்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான 4 பசுக்கள், 1காளை, 1கிடாரி ஆகியவை உயிரிழந்தன. மேலும் 4 காளை மாடுகள் , 1பசு காயமடைந்தன.இச்சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 31, 2026

விருதுநகர்: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

image

விருதுநகர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

error: Content is protected !!