News December 26, 2025
சிவகாசி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி அருகே திருத்தங்கல் கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி கற்பகம் (58). இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ச்சியாக மருத்துவம் பார்த்து மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளார். வயிற்று வலி தீராததால் மனமுடைந்த இருந்த கற்பகம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 30, 2025
ஸ்ரீவி ஆண்டாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த சனிக்கிழமை பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. இதில்,தினசரி காலை ஆண்டாள் ரங்கமன்னர்,பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் காட்சியளித்தனர். இராப்பத்து உற்சவம் இன்று ஆரம்பமாக உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5:20 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.
News December 30, 2025
ஸ்ரீவி ஆண்டாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த சனிக்கிழமை பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. இதில்,தினசரி காலை ஆண்டாள் ரங்கமன்னர்,பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் காட்சியளித்தனர். இராப்பத்து உற்சவம் இன்று ஆரம்பமாக உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5:20 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.
News December 29, 2025
விருதுநகர்: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <


