News January 15, 2026
சிவகாசி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள எலுமிச்சங்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமலிங்கம் (85). இவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே பொங்கல் பண்டிகைக்கு காப்பு கட்டும் செடிகளை பிடுங்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதகவ்ல் அறிந்து சென்ற ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத் துறையினர் முதியவரின் சடலத்தை மீட்டனர்.
Similar News
News January 23, 2026
விருதுநகர்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு04562-252388 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News January 23, 2026
விருதுநகர்: ரூ.555 செலுத்தினால்., ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸை அனுகவும். இதனை SHARE IT.
News January 23, 2026
ஸ்ரீவி: ராணுவ வீரர் வீட்டில் திருடியவர் கைது

பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த கண்ணன் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது மனைவி லட்சுமிதேவி சிவகாசியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு பெருமாள்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பணம் மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்றனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்துள்ளனர்.


