News December 20, 2025
சிவகாசி அருகே உணவக உரிமையாளர் விபத்தில் பலி!

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் சித்தரஞ்சன் (60). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வந்தார். உணவகத்திற்கு தேவையான பொருட்களை வாங்க பைக்கில் வந்துள்ளார். சிவகாசி பஜார் பகுதியில் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 22, 2025
விருதுநகர்: கூலி தொழிலாளி மர்மமான முறையில் மரணம்

ராமநாதபுரம் கமுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(33). இவர், திருத்தங்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த காளீஸ்வரன் மதுபோதைக்கு அடிமையாகிய நிலையில் நேற்று அதிவீரன்பட்டி கல் கிடங்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
News December 22, 2025
சிவகாசி: பள்ளி மைதானத்திலே கஞ்சா விற்பனை!

சிவகாசி அருகே திருத்தங்கல் தனியார் பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உடனே அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்ற கண்ணகி காலனியை சேர்ந்த பால்ராஜ்(20), தினேஷ்குமார் 26, வினோத்ராஜா 21, ஆகியோரை கைது செய்தனர். மேலும், அங்கிருந்து தப்பி ஓடிய சிவகாசி அய்யப்பன் காலனியை சேர்ந்த விக்னேஷ்வரன் (எ)விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.
News December 22, 2025
விருதுநகர்: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

விருதுநகர் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு <


