News October 24, 2025
சிவகாசியில் 140 டன் குப்பைகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் தீபாவளி முன்னிட்டு உள்ளூரிலேயே பட்டாசு தயாரிக்கப்படுவதால் மக்கள் அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். மாநகராட்சியில் சாதாரணமாக ஒரு நாளில் 50 முதல் 52 டன் குப்பையில் துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் கடந்த 2 நாட்களில் சுமார் 140 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 24, 2025
ஸ்ரீவி: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு சிறை

அருப்புக்கோட்டை பகுடியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்துள்ளார். வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் சிறுமியின் தந்தை மற்றும் குற்றத்தை மறைத்ததாக தாயையும் கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.தாய் விடுவிப்பு.
News October 24, 2025
சிவகாசியில் 2 நாளில் 140 டன் குப்பைகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் தீபாவளி முன்னிட்டு உள்ளூரிலேயே பட்டாசு தயாரிக்கப்படுவதால் மக்கள் அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். மாநகராட்சியில் சாதாரணமாக ஒரு நாளில் 50 முதல் 52 டன் குப்பையில் துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் கடந்த 2 நாட்களில் சுமார் 140 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 23, 2025
விருதுநகரில் பேருந்தை ஓட்டிச் சென்ற போலீஸ்

அருப்புக்கோட்டை – விருதுநகர் நோக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று(அக்.22) காலை தனியார் பேருந்து சென்றது. ஆர்.எஸ்.நகர் அருகே வந்த போது டிரைவர் திடீரென பிரேக் அடித்ததால் பெண் பயணி கீழே விழுந்து காயமடைந்தார். இவர் இறந்து விட்டதாக நினைத்த டிரைவர் தப்பிச்சென்ற நிலையில் கிழக்கு போலீசார் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் போலீசார் பஸ்ஸை ஓட்டி சென்று பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டனர்.


