News August 18, 2025
சிவகாசியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிவகாசி பகுதியை சேர்ந்த 44 வயது பெண் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான தனது 14 வயது மகளுடன் தனியாக வசிக்கிறார். பட்டாசு ஆலையில் பணியாற்றி வரும் பெண்ணிற்கு அங்கு டிரைவராக வேலை செய்யும் மாரிக்காளை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாரிக்காளை மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
BREAKING விருதுநகர்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

பாரப்பத்தியில் தவெக மாநாடு நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை – மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும். விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை செல்லும் பொதுமக்கள் வாகனங்கள் ராம்நாடு ரிங்ரோட்டில் இருந்து திருப்பவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்லலாம்.
News August 18, 2025
விருதுநகரில் ஆக. 22-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகரில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 11 மணியளவில் புதிய ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும் விவசாயிகள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை! ரயில்வே வேலை வாய்ப்பு!

விருதுநகர் இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு <