News October 8, 2025
சிவகாசியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

சிவகாசி அருகே ஈஞ்சார் தெற்கு தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (20). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கிச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பரணி ராஜன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
Similar News
News October 8, 2025
விருதுநகர்: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News October 8, 2025
அருப்புக்கோட்டையில் பேருந்து கட்டணம் உயர்வு?

மதுரையில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை செல்லும் தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை – மதுரைக்கு ரூ.40 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.50 வசூலிக்கப்படுகிறது. எலியார்பத்தி சுங்கச்சாவடியில் பேருந்துகளுக்கான சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் புகார் எழுந்த நிலையில் தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News October 8, 2025
சிவகாசி டி.எஸ்.பி அதிரடி மாற்றம்!

சிவகாசி டி.எஸ்.பி பாஸ்கரன் தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிவகாசி டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த இவர் தற்போது விழுப்புரம் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டி.எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். சிவகாசிக்கு விரைவில் புதிய டி.எஸ்.பி நியமிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.