News September 12, 2025

சிவகாசியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

சிவகாசி சாரதா நகரை சேர்ந்தவர் ராஜ்(45). இவர் மாரனேரி பர்மா காலனியில் மினரல் வாட்டர் பிளான்ட் நடத்தி வருகிறார். இவரது மகன் சஞ்சய்குமார்(19) தனது தந்தையின் மினரல் வாட்டர் பிளான்டுக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டாரை ஆப் செய்ய சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 12, 2025

விருதுநகர்: பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்..!

image

சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரபியம்மாள் மற்றும் போலீசார் 56 வீட்டு காலனி பகுதியில் உள்ள குடோனில் சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த குடோனில் சட்டவிரோதமாக 5 அட்டை பெட்டிகளில் பேன்சி வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு இருந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 32), முருகன் (38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

News September 12, 2025

விருதுநகர்: ரேஷன் கடையில் பொருட்கள் தரவில்லையா?

image

விருதுநகர் மக்களே, உங்க ரேஷன் கடையில் சரியாக அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கவில்லையா? உடனே புகார் பண்ணுங்க.
▶️ராஜபாளையம் – 04563220500
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
▶️சாத்தூர் – 04562260220
▶️சிவகாசி – 04562224260
▶️விருதுநகர்- 04562243493
▶️அருப்புக்கோட்டை – 04566220219
▶️திருச்சுழி – 04566282222
▶️காரியாபட்டி – 04566255570
▶️வெம்பக்கோட்டை – 04562284202
▶️வத்திராயிருப்பு – 04563288800

News September 12, 2025

BREAKING: ஸ்ரீவி., போத்தீஸ் கடையில் ஐடி ரெய்டு

image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரபல போத்தீஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .நுழைவாயில்கள் பூட்டப்பட்ட நிலையில், அதிகாரிகள் கடையின் இருப்பு, விற்பனை ஆவணங்கள் மற்றும் கணினி பதிவுகளை ஆய்வு செய்கின்றனர். இதனால் ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் விடுப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!