News September 3, 2025

சிவகாசியில் மட்டும் புதிய வசதி அறிமுகம்

image

சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணச் சீட்டுக்கான முன்பதிவு வசதிக்காக, தனி கவுன்டா் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், தத்கல் முன்பதிவுக்கான பயணச் சீட்டுகளையும் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சலக வேலை நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். தென் மாவட்டங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில், சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Similar News

News September 5, 2025

விருதுநகரில் ரூ.71,900 ஊதியத்தில் அரசு வேலை ரெடி

image

விருதுநகர் மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10-ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> செப். 30 வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். மாவட்ட வாரியாக பணிநியமனம் செய்யப்படும். சொந்த ஊரில் அரசு வேலை! எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News September 4, 2025

BREAKING சிவகாசி: பட்டாசு விற்பனை அதிரடி உத்தரவு

image

ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கு தொடர்ந்தார். அதில் அன்லைன் பட்டாசு விற்பனை குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. ஆன்லைன் பட்டாசு விற்பனை செய்வது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

சிவகாசியில் தர்பூசணி பட்டாசு அறிமுகம்

image

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் சூடுபிடித்துள்ளது. இதனிடையே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வடிவிலான பட்டாசுகள் அறிமுகப்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தர்பூசணி வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தத்துருவமாக தர்பூசணி போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்டாசுகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

error: Content is protected !!