News February 2, 2026
சிவகாசியில் பத்திரகாளியம்மன் கோவில் பணம் கொள்ளை

சிவகாசியில் பிரசித்திபெற்ற பத்திரகாளியம்மன் கோவில் அலுவலகத்தில் கிரகதுரை (63) என்பவர் நிர்வாக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் பக்தர்கள் வழங்கிய நன்கொடை பணம் ரூ.30 ஆயிரத்தை அலுவலக அறைக்குள் வைத்துவிட்டு இரவு வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலக அறை கதவு திறக்கப்பட்டு உள்ள இருந்த ரூ.30000 பணம் திருடப்பட்டது தெரியவந்த நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News February 10, 2026
விருதுநகர் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் அருகே பாவாலியைச் சேர்ந்தவர் பெரிய கருப்பண்ணன் வயது 80. இவரின் மனைவி இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விரைந்து வந்த ஆமத்தூர் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு.
News February 10, 2026
விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE
News February 10, 2026
சிவகாசி: பஸ் மோதி ஒருவர் பலி!

சிவகாசி, திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சேர்ந்த நடராஜன்(45). சம்பவத்தன்று அவர் டூவீலரில் எரிச்சநத்தம் – சிவகாசி மெயின் ரோட்டில் சென்றபோது, காளையார்குறிச்சி அருகே வந்த தனியார் பள்ளி பஸ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பள்ளி பஸ் டிரைவர் காட்டுராஜா(53) மீது திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


