News September 21, 2025
சிவகாசியில் இரட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

சிவகாசி பகுதியை சேர்ந்தவர் சுமன்பாண்டிதுரை(29). இவர் சிறுநீர் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மதுரை அருகே உறவினர் வீட்டில் தங்கினார். அதே ஊரில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வந்த இரட்டை சிறுமிகளுக்கு சுமன்பாண்டித்துரை பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் சிறுமிகள் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிறுமியின் சகோதரர் சுமன்பாண்டிதுரையை கத்தியால் குத்தியதில் காயமடைந்தார்.
Similar News
News November 6, 2025
சிவகாசியில் சுட்டுப் பிடிக்க அனுமதிக்க கோரி மனு

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி அருகே ஈஞ்சார் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை தொடர்ந்து காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு ஆவண செய்திட வலியுறுத்தி சார் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
News November 6, 2025
அருப்புக்கோட்டையில் தவறி விழுந்து உயிரிழப்பு

காரியாபட்டி அருகே வக்கனாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் ராதா (58). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று (நவ. 5) பிற்பகல் வேளையில் அருப்புக்கோட்டை சின்னப்புளியம்பட்டி பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கால் இடறி கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 5, 2025
விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<


