News October 14, 2025

சிவகங்கை: 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை, மதுரை, ராம்நாடு, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சிவகங்கையில் இன்று (அக் 14) முதல் அக். 18 (சனி) வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 14, 2025

சிவகங்கை: வேலைவாய்ப்பு முகாம்

image

சிவகங்கையில் உள்ள மாவட்ட மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் நெறி மையத்தில் 17 -10 -2025 வெள்ளிக்கிழமை, காலை 10:30 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ போன்ற கல்வி தகுதி உடைய இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

மானாமதுரை, காரைக்குடி வழியாக மும்பை எக்ஸ்பிரஸ்

image

மதுரை ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் அக்-16, 17, 18 மற்றும் 22ம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மானாமதுரை, காரைக்குடி, வழியாக இயக்கப்படும். அதுபோல நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் அக்-23 மற்றும் 26ம் தேதிகளில் மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News October 14, 2025

மானாமதுரை அடையாளம் தெரியாத நபர் விபத்தில் பலி

image

மானாமதுரை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் கோயில் அருகில் நேற்று இரவு 11 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் TN63BM5965 டூவீலரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!