News November 24, 2025
சிவகங்கை: 20 ஆண்டுகளாக போராடும் மக்கள்

காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள அரியக்குடிக்குட்பட்ட பாலாஜி நகரில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு சாலை வசதியின்றி மக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்து வருகின்றனர். தற்போது மாநகாராட்சியில் புகார் அளித்துள்ளனர்
சாலை அமைக்கும் திட்டம் செயல்முறையில் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Similar News
News November 28, 2025
JUST IN: சிவகங்கை பள்ளிகளுக்கு விடுமுறையா.? விளக்கம்

தமிழகத்தில் நாளை (நவ.29) சனிக்கிழமையன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக பரவிய தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பள்ளிகள் விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவர் என்றும், தற்போது பரவிய தகவல் உண்மையில்லை என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
BREAKING சிவகங்கையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை (நவ.29) சனிக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘டித்வா’ புயல் எச்சரிக்கை காரணமாக, மாணவர்கள் நலன் கருதிமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
News November 28, 2025
சிவகங்கை மாவட்டத்தில் 12,144 நாய்களுக்கு தடுப்பூசி

சிவகங்கை மாவட்டம், சமூக நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தற்போது வரை மாநகராட்சி அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் 12,144 எண்ணிக்கையிலான சமூக நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கும் ARV தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி, இன்று தெரிவித்துள்ளார்.


