News October 26, 2025

சிவகங்கை: ரயிலில் சிக்கிய மாடு: பாலத்தின் நடுவே நிறுத்தம்

image

மானாமதுரை வழியாக திருச்சிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.நேற்று மாலை 4:30 மணிக்கு மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரயில் கிளம்பியது. அண்ணாதுரை சிலை ரயில்வே கேட் பகுதியில் பசு மாடு ஒன்றின் மீது மோதி ரயிலின் அடியில் சிக்கி ஆறு ரயில்வே மேம்பாலத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே போலீசார், ஊழியர்கள் வந்து இறந்த பசுமாட்டை அகற்றிய பிறகு ரயில் 1மணி நேரம் தாமதத்திற்கு பிறகு கிளம்பி சென்றது.

Similar News

News October 26, 2025

சிவகங்கை: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல்<> www.rrbapply.gov.in <<>>என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத வாய்ப்பை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 26, 2025

சிவகங்கையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 25, 2025

சிவகங்கை:பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

சிவகங்கையில் அக்.27 அன்று மருதுபாண்டியர் நினைவேந்தல், அக்.30 அன்று தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் அக்.27,30 அன்று சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையாங்குடி ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர் பொற்கொடி விடுமுறை அளித்துள்ளார். இதே போல் அன்று கீழடி அருங்காட்சியகத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!