News November 3, 2025

சிவகங்கை: மூதாட்டியிடம் 3.5 பவுன் நகை பறிப்பு

image

கீழடி அருகே சொட்டதட்டிக்கு செல்லும் வழியில் கரிச்சாவூரணியில் ரோட்டோரம் சிவகாமி (65), என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ரூ.100 கொடுத்து கடலை மிட்டாய் வாங்கியுள்ளனர். மீதி சில்லரை எடுத்து கொண்டிருந்த போது மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3.5 பவுன் செயினை வழிப்பறி செய்து தப்பினர். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 3, 2025

சிவகங்கை: ஊர்க்காவல் படை தேர்வு ஒத்திவைப்பு

image

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 110 பணியிடங்களை நிரப்ப 10.10.2025-ம் தேதி முதல் 15.10.2025 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு 04.11.2025-ம் தேதி அன்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், சான்றிதழ் சரிபார்ப்பும் மற்றும் உடற்தகுதித் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக மேற்படி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக எஸ்பி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 3, 2025

BREAKING: இளையான்குடியில் இரு தரப்பினர் மோதல்

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இளமனூரில் சாதி தலைவர்களின் பிளக்ஸ் பேனர் வைப்பதில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தாக்கி கொண்டதில், ஒரு சமூகத்தை சேர்ந்த 5 பேருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது. மோதலை தடுக்க சென்ற போலீசாரும் காயமடைந்த நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பரபரப்பு நிலவி வருகிறது.

News November 3, 2025

சிவகங்கை: வாக்காளர் கணக்கெடுப்பு பணி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் நவம்பர் 04-ஆம் தேதி முதல் டிச.4 -ஆம் தேதி வரை வாக்காளா் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. வாக்காளா் கணக்கெடுப்பின்போது, தற்போதைய நாள் வரை வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் சுய விவரங்கள் பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்கள் இரட்டைப் பிரதிகளில் வழங்கப்படவுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!