News January 31, 2026

சிவகங்கை: மின் தடை பகுதிகள் அறிவிப்பு

image

பூசலக்குடி, அமராவதி புதூர் துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தங்குடி, கண்டியூர், சாத்தனகோட்டை, சிறுவாச்சி, ஜமீன்தார் காலனி, நாகவயல் சாலை, காதி நகர், சங்கராபுரம், எஸ்.ஆர். பட்டணம், ஆறாவயல், விசாலயங்கோட்டை, கல்லுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE

Similar News

News February 1, 2026

சிவகங்கை : இலவச வக்கீல் சேவை Whatsapp எண்…!

image

சிவகங்கை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 1, 2026

காரைக்குடி: கேஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

image

காரைக்குடி டிடி நகரில் கருப்பையா என்பவரது வீட்டில் ஜன.30 அன்று கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் கருப்பையா, லட்சுமி (ம) தெய்வானை ஆகிய 3 பேரும் தீயில் கருகி காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பையா, லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காரைக்கடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!