News August 25, 2025
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு.

சிவகங்கை: விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே சிவகங்கை மாவட்டத்தில் தேசிய ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், ஒரு எக்டேருக்கு ரூ.1,500 மதிப்பிலான உயிர் உரங்கள் மற்றும், இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
சிவகங்கை: வாழை இலை விலை உயர்வு

(ஆக.25) சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கானுார், மாரநாடு, மடப்புரம், கருங்குளம் பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி, ஆவணி முகூர்த்த நாட்களை முன்னிட்டு வாழை இலைகளின் தேவை அதிகரித்துள்ளதால் இலை கட்டுகளின் விலை தற்போது அதிகமாக உயர்ந்துள்ளது.
News August 25, 2025
சிவகங்கையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

சிவகங்கை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் சிவகங்கை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000470, 9445000471, புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News August 25, 2025
சிவகங்கை: கேஸ் சிலிண்டர் தொடர்பான பிரச்னைக்கு!

சிவகங்கை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மறக்காம SHARE பண்ணுங்க.ஆபத்தில் இது கண்டிப்பாக உதவும்.