News September 8, 2025

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இதுவரை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் புறப்பட்ட ரயில் எண் 16751 தினசரி போட் மெயில் ரயில்
செப்.11 முதல் நவ.10 வரை தாம்பரத்தில் இருந்து  மாலை 7:42 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News September 8, 2025

மானாமதுரை இளைஞர் கொலையில் 7 பேர் கைது

image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஒலி பெருக்கி அமைப்பாளraana காளீஸ்வரன் என்ற இளைஞரை, சங்கமங்கலம் தென்றல் நகா் பகுதியில் மா்ம கும்பல் அரிவாளால் கடந்த சனிக்கிழமை அன்று வெட்டிக் கொலை செய்துதப்பியோடியனர். இக் கொலைதொடா்பாக நேற்று வரை 7 பேரை மானாமதுரை போலீஸாா் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 8, 2025

சிவகங்கை: குவியும் வேலைவாய்புகள் APPLY NOW!

image

சிவகங்கை மக்களே,

▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login

▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php

▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/

▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/

▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/

மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 8, 2025

காரைக்குடி காவல் நிலையத்தில் ரகளை

image

காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவலர்கள் மனுக்களை விசாரித்தனர். அதில் குடும்ப பிரச்சினை தொடர்பாக வந்திருந்த 2 தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதை ஆய்வாளர் செல்வி, பெண் காவலர்கள் தடுக்க முயன்றனர். ஆனால், இரு தரப்பினரும் கீழே தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆய்வாளர் செல்வி அளித்த புகாரின்பேரில், இரு தரப்பிலும்13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!