News April 14, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஒரு வாய்ப்பு

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக கோவை விரைவு ரயில் வ.எண்(16322) வருகின்ற ஏப்ரல் 25, 26, 28, 29′ 30 ஆகிய 5 நாட்களுக்கு வழக்கமாக நாகர்கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் செல்லாது. மாறாக காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் எனவே சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் 5 நாளைக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News September 18, 2025
சிவகங்கையில் சிறப்பு முகாம் தேதியை அறிவித்த கலெக்டர்

தமிழக முதல்வரின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமானது, வருகின்ற 20.9.2025 அன்று காளையார்கோவில் ஹோலி ஸ்பிரிட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறவுள்ள முகாமினை பயன்படுத்திக் கொண்டு, தங்களது உடல்நலத்தினை முறையாக பேணிக்காத்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
News September 18, 2025
சிவகங்கை: 10th தகுதி.. ரூ.71,000 சம்பளத்தில் வேலை

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.<
News September 18, 2025
சிவகங்கை:மாதம் ரூ.750 உதவி தொகையுடன் படிக்கலாம்

சிவகங்கை முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நிகழாண்டு நேரடி மாணவர் சேர்க்கை வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது மாதம் ரூ.750 உதவி தொகை வழஙகப்படும்.