News September 3, 2025

சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் நேற்றும், இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட டூவீலர், கார் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து whatsapp மெசேஜ் வந்துள்ளது. இது போலியான சைபர் கிரம் மோசடி. காரைக்குடி தேவகோட்டை பகுதியில் பலர் ரூ1000, 5000 என இந்த மோசடியில் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது. இந்த புதிய மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர்.

Similar News

News March 4, 2026

சிவகங்கை: இழந்த பணத்தை இனி திரும்ப பெறலாம்..

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News March 4, 2026

சிவகங்கை: OPS அணி அமைச்சர் தலைமையில் திமுகவில் ஐக்கியம்.!

image

சிவகங்கை திமுக மாவட்ட செயலாளரும், கூட்டுறவுதுறை அமைச்சருமான கே.ஆர் பெரியகருப்பன் முன்னிலையில், நேற்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர். அமைச்சர் பெரியகருப்பன் கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார். உடன் சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், திருப்புவனம் பேரூராட்சி சேர்மன் சேங்கை மாறன் ஆகியோர் இருந்தனர்.

News March 4, 2026

சிவகங்கை: அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

image

மதகுபட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த மாணவி சினேகா (20), அரசு மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீசியன் 2 ம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் கல்லூரி தேர்வை சரியாக எழுதவில்லை என பெற்றோர்களிடம் புலம்பியுள்ளார். பெற்றோர் அவரை சமாதானம் செய்த நிலையில், பிப்.28 அன்று எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இவரை மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!