News December 30, 2025
சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை ரெடி..

புதிதாக தொடங்கப்பட்ட சங்கராபுரம் மற்றும் மானாமதுரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நெற்குப்பை, சாலைகிராமம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர், ஐசிடிசி கவுன்சிலர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 31.12.2025 முதல் 19.01.2026 வரை பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். என ஆட்சியர் பொற்கொடி கூறியுள்ளார்.SHARE பண்ணுங்க.
Similar News
News December 31, 2025
காரைக்குடி: ரயில் பயணிகள் கவனத்திற்கு

சிவகங்கை மாவட்டத்தின், முக்கிய ரயில் தடமான காரைக்குடிக்கு ரயில் நிலைத்திற்க்கு வந்து, செல்லும் ரயில்களின் 01-01-2026, நாளை முதல் புதிய ரயில் நேர அட்டவணை வெளியிட்பட்டுள்ளது. காரைக்குடி ரயில் நிலையத்தை பயன்படுத்தும் அனைத்து இரயில் பயணிகளும் இந்த அட்டவணை நேரப்படி தங்கள் பயணங்களை அமைத்து கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News December 31, 2025
சிவகங்கை: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 31, 2025
சிவகங்கை: ஆன்லைன் ஆப் மூலம் ரூ.2.76 லட்சம் மோசடி!

சிவகங்கை வாணியங்குடியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது அலைபேசிக்கு டெலிகிராம் ஆப் மூலம் பகுதி நேர வேலை தருவதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தொடர்பு கொண்டு பேசியவரின் வங்கி கணக்கிற்கு ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 29 மாற்றினார். அந்த பணத்தை பெற்ற அந்த நபர் பகுதி நேர வேலை பெற்றுத்தரவில்லை. பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமர்நாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.


