News December 17, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (16.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 18, 2025

சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (04575240388) அணுகலாம். SHARE பண்ணுங்க…

News December 18, 2025

சிவகங்கை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

image

இளையான்குடி வட்டத்தில், வட்டாட்சியர் ரத்தினவேல்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 2 நாட்களாக சமுதாயத் தலைவர்கள் புகைப்பட பலகைகள், சிமெண்ட் பீடங்களை அகற்றினர். நேற்று குமாரக்குறிச்சியில் பீடத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பரமக்குடி – இளையான்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை டிஎஸ்பி அமலஅட்வின் சமரசத்தை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

News December 18, 2025

காரைக்குடி: பூட்டை உடைத்து நகை திருட்டு.. தொழிலாளி கைது

image

காரைக்குடி அருகே கோட்டையூர் அருணாசலம் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் தினகரன். இவருக்கு சொந்தமான தோட்டம் மணச்சை பகுதியில் உள்ளது. இங்கு காரைக்குடி நெசவாளர் காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து, 5 மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து நின்று விட்டார். இந்நிலையில் தினகரன் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவன் நகையை ரவிச்சந்திரன் திருடிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!