News September 13, 2025
சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்தாய்வு

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மா.சௌ.சங்கீதா தலைமையில், மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமையில் வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் தேவைகள் தொடர்பாக அலுவலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் திட்டங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, திட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Similar News
News September 13, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கனத்திற்கு!

சிவகங்கை -பாலக்காடு சந்திப்பு இடையே UTS செயலியில் செல்வதற்கு முன்பதிவில்லா பயணச்சீட்டு இதற்கு முன்னர் கொடுக்காமல் இருந்தது. இந் நிலையில் காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை இருப்புபாதை பயணிகள் நலகூட்டமைப்பு சார்பாக வைத்த கோரிக்கையை ஏற்று இன்று முதல் சிவகங்கை – பாலக்காடு சந்திப்பு இடையே UTS செயலியில் செல்வதற்கு முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
News September 12, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்.

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்டம்பர் 12) இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, மானாமதுரை உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் அவசர தேவைக்கு பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
News September 12, 2025
சிவகங்கை: மழைக்கு ஒருவர் உயிரிழந்த சோகம்..!

சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்யும் நிலையில் (11.09.2025) காலை 6 மணி முதல் (12.09.2025) காலை 6 மணி வரை சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமாக 208.60 மி.மீ, சராசரி மழை 23.18 மி.மீ ஆக இருந்தது. திருப்புவனம் பகுதியில் 88.40 மிமீ (Heavy Rainfall) பதிவானது.1 மனித உயிரிழப்பு மற்றும் 1 குடிசை வீடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.