News August 28, 2024

சிவகங்கை மாவட்டத்திற்கு அன்பில்-25 விருது

image

திருச்சிராப்பள்ளியில் அன்பில் அறக்கட்டளையின் 25ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு கல்விச் சேவையாற்றிய பெருந்தகையாளர்களுக்கும் , கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் “அன்பில்-25 விருது” இன்று வழங்கப்பட்டது.  இதில் சிவகங்கை மாவட்டம் பொதுத் தேர்வில் மாநிலம் அளவில் இரண்டாமிடம் பெற்றமைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கரங்களால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து விருது பெற்றார்.

Similar News

News August 16, 2025

சிவகங்கை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (16.08.25)  இன்று இரவு 10 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட 
 காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம் என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News August 16, 2025

சிவகங்கை: 1 இலட்சம் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருட்கள் பயன்படுத்தும் உரிமம் பெற்ற உணவகங்களுக்கு 1 இலட்சமும், பதிவு சான்றிதழ் பெற்ற உணவு வணிகருக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை உணவு பாதுகாப்பு அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆக.31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04575-243725.

News August 16, 2025

சிவகங்கை: மத்திய அரசில் 201 காலிப்பணியிடம்

image

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <>*இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பித்து நீங்களும் மத்திய அரசு அதிகாரி ஆகுங்கள். SHARE பண்ணுங்க

error: Content is protected !!