News January 10, 2025
சிவகங்கை, மானாமதுரை வழியாக சிறப்பு ரயில்கள்

சிவகங்கை: சென்னை, திருச்சியில் இருந்து சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் கால அட்டவணை வெளியாகி உள்ளது. 8 ரயில்கள் இந்த பாதையில் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த கால அட்டவணையை பயன்படுத்தி பயணிகள் தவறாமல் பதிவு செய்து கொள்ளவும்.
Similar News
News December 14, 2025
சிவகங்கை: கோவிலில் உண்டியல் திருட்டு.!

இளையான்குடி அருகே குறிச்சி கிராமத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு வந்த சுப்பிரமணியன் என்பவர் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இளையான்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு திருடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
News December 14, 2025
சிவகங்கை: லைன் மேனை தேடி அலைய வேண்டாம்.!

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News December 14, 2025
சிவகங்கை: டூ வீலரிலிருந்து தவறி விழுந்து பெண் பலி.!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கொழுவூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் தனது மனைவி கலைவாணியுடன் பரமக்குடியில் இருந்து ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, கலைவாணி எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


