News September 13, 2025

சிவகங்கை மக்களே இந்த APP ரொம்ப முக்கியம்..!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், எதிர்பாராத விதமாக அதீத மழை, புயல் பாதிப்பு, மோசமான வானிலை காலங்களில் மக்களை எச்சரிக்கும் வகையிலும், உள்ளூர் வானிலை தொடர்பான உடனடி தகவலை வழங்கும் வகையிலும் தமிழக அரசு TN ALERT செயலியை அறிமுகம் செய்துள்ளது.<> இங்கு கிளிக் செய்து <<>>பதிவிறக்கம் செய்தால், உங்கள் பகுதி வானிலை நிலவரத்தை எளிதாக அறியலாம். விவசாயிகளுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும். SHARE IT.!

Similar News

News September 13, 2025

சிவகங்கை: AI தொழில் நுட்பம் மூலம் இறந்த யானையின் சிலை

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுப்புலெட்சுமி என்ற யானை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ந் தேதி எதிர்பாராத விதமாக தீ விபத்தில் சிக்கி இறந்துவிட்டது. அதற்கு நினைவாக குன்றக்குடியில் சிலை அமைக்க இன்று, செப்டம்பர் 13, பூமி பூஜை செய்யப்பட்ட நிலையில், யானையின் AI தொழில் நுட்ப சிலை வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News September 13, 2025

சிவகங்கை: அனைத்து வரிகளும் இனி ஒரே LINK க்கில்..!

image

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News September 13, 2025

சிவகங்கை மக்களே நிலுவை வழக்கை முடிக்க ஒர் வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க இன்று (செப்டம்பர்- 13) சனிக்கிழமை காலை 10 மணி முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் “லோக் அதாலத்” நடைபெறும் என மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ‘அறிவொளி’ அறிவித்தார். மோட்டார் விபத்து, நஷ்ட ஈடு, காசோலை மோசடி, குடும்ப-தொழிலாளர் பிரச்னைகள், சமரச குற்ற வழக்குகள் உள்ளிட்டவை இம்முகாமில் தீர்க்கப்படும்.

error: Content is protected !!