News November 21, 2024
சிவகங்கை மக்களுக்கு மின்சார வாரியம் அறிவுரை

சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஆடியோ மூலம் அறிவித்துள்ள இந்த பதிவில், சாலைகளில், தெருக்களில், வயல் வழிகளில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், ஆடு மாடு போன்ற கால்நடைகளை மின்சார கம்பத்தில் கட்ட வேண்டாம் எனவும் மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News August 9, 2025
சிவகங்கை: மன அமைதி பெற இங்க போங்க.!

சிவகங்கை நகரசூரக்குடியில் அமைந்துள்ளது தேசிகநாதர் கோயில். இங்குள்ள பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு. ஒரு யாகத்தில் சூரியன் பங்கேற்று, சிவனை அழைக்காததால் ஆத்திரமடைந்த சிவன், சூரியனை தண்டித்தார்.பின்னர் சிவன் கருணை கொண்டு சாப விமோசனம் தந்தார்.இதனடிப்படையில் அங்கு கோயில் எழுப்பப்பட்டது. குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, மன அமைதி பெற இங்கு வழிபட்டால் நடக்கும் என்பது ஐதீகம்.
News August 9, 2025
ஆங்கிலேயர் கால கல்வெட்டு கண்டடுப்பு

ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தையும், புதுக்கோட்டை அரசையும் பிரிக்கும் எல்லைக்கல் ஒன்று சிவகங்கை நெற்குப்பைக்கும் புதுக்கோட்டை வேந்தன்பட்டிக்கும் நடுவே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதர் மண்டிய இடத்தில் காணப்பட்டது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்.
News August 9, 2025
சிவகங்கை: கேஸ் BILL பிரச்சனையா இதை பண்ணுங்க..!

சிவகங்கை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.யாருக்காவது கண்டிப்பாக உதவும்.