News September 10, 2025
சிவகங்கை: பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில், 2025-26 ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் நேரடித் தனித் தோ்வா்களும், 2012-க்கு முன்னர் அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவா்களும் செப்-19 ஆம் தேதிக்குள் மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகத்தை நேரில் அணுகி அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
காரைக்குடியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ நேற்று (மார்ச் – 02) சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். உடன் கட்சியைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக ஆதரவாளர்கள் இருந்தனர்.
News March 3, 2026
சிவகங்கை: தீ விபத்தில் கருகிய 30 உயிர்கள்

காளையார் கோவில் அருகே உள்ள நல்லேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுதாகர். இவர் சாலைக்கிராமம் அருகே உள்ள குறிச்சி கிராம வயல் பகுதிகளில் ஆட்டு கிடை அமைத்துள்ளார். இவரது கிடை அருகில் உள்ள வயல்களில் திடீரென தீ பற்றியதைத் தொடர்ந்து பலத்த காற்றினால் சுதாகர் கிடை அமைத்திருந்த வயலிலும் தீ பரவியதால் அங்கு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட ஆடுகள் தீயில் கருகி பலியாகின.
News March 2, 2026
வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளராக (District Banking Co-ordinator) பணியாற்ற தகுதியுள்ள நபர்கள் 07.03.25 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் மாவட்ட மக்கள் கற்றல் மையம், மாவட்ட இயக்க மேலாளர்மை அலகு, கோர்ட் வாசல் அருகில், மேலூர் ரோடு, சிவகங்கை 630561 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பொற்கொடிஇன்று தெரிவித்துள்ளார்


