News February 2, 2026

சிவகங்கை: பைக் மீது லாரி மோதி விபத்து

image

தேவகோட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் முப்பையூர் சென்று விட்டு திரும்பி வருகையில் மதுரை–தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பொதுக்குடி சந்திப்பு பகுதியில் அடையாளம் தெரியாத லாரி இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன், சூர்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 4, 2026

JUST IN அஜித்குமார் கொலை வழக்கு; CBI திடுக் தகவல்.!

image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது, நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் பொய்ப் புகார் என சிபிஐ தெரிவித்துள்ளது. அவரது மரணம், காவல் மரணம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜாமீன் கோரி கைதான காவலர்கள் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணை பிப்.17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News February 4, 2026

சிவகங்கை: Gpay / Phonepe / paytm யூஸ் பண்றீங்களா?

image

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News February 4, 2026

BREAKING: சிவகங்கை அஜித்குமார் கொலை மனம் பதறுகிறது : நீதிபதி

image

கடந்த வருடம் 2025 ஜீன் மாதம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் இன்று விசாரணைக்கு வந்தது. அஜித் குமார் மீது நிகிதா அளித்த புகார் உண்மை இல்லை. ஒன்றுமில்லாத வழக்கில் ஒருவர் அடித்து கொலை. காவல்துறையின் செயலை பார்த்தால் மனது பதறுகிறது. என நீதிபதி ஸ்ரீமதி வேதனை தெரிவித்துள்ளார்

error: Content is protected !!