News January 30, 2026
சிவகங்கை: பேருந்தில் நகை திருடிய பெண்கள் கைது

கோட்டையூரை சேர்ந்தவர் கவுசல்யா. காரைக்குடிக்கு டவுன் பஸ்சில் சென்றுள்ளார். அப்போது அழகப்பா பல்கலை அருகே வந்தபோது இவருக்கு அருகில் இருபெண்கள் நின்றுள்ளனர். அதற்கு பின் அழகப்பா கல்லூரியில் இறங்கி பார்த்தபோது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கவுசல்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி, ஷாலினி இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News February 8, 2026
சிவகங்கை: 2.5% வட்டியில் தனிநபர் கடன்

சிவகங்கை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <
News February 8, 2026
சிவகங்கை: கோழிக்காக சகோதரருக்கு அரிவாள் வெட்டு

தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் சகோதரர்கள். இந்நிலையில், கருப்புசாமியின் கோழி பாலமுருகனின் வீட்டுக்குள் சென்றதாகவும் இதனால் ஏற்பட்ட தகராறில் பாலமுருகன், கருப்புசாமியை அரிவாளால் தாக்கி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருப்புசாமி கொடுத்த புகாரின் பெயரில் பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.
News February 8, 2026
சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சிவகங்கை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


