News April 8, 2026
சிவகங்கை: பெண்ணிடம் ஆசை காட்டி மோசடி.!

தேவகோட்டை அண்ணாநகரை சேர்ந்த 37 வயது பெண்ணிடம் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அலைபேசியில் பேசியுள்ளனர். அதில் கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதை நம்பிய அப்பெண் அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.89 ஆயிரத்து 125-ஐ செலுத்தியுள்ளார். பின்னர் கடன் கிடைக்காததால், மோசடியை அறிந்து சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News April 8, 2026
காரைக்குடி: காவல் நிலையத்தில் கைவரிசை காட்டிய கும்பல்.!

காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் மணல் கடத்தியதாக வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அந்த லாரி திடீரென மாயமானது. இதுகுறித்து எஸ்.ஐ கார்த்திகேயன் புகார் அளித்த நிலையில், காவல் நிலையத்தில் நின்றிருந்த லாரியை கடத்தியதாக கணேசபுரம் செந்தில்குமார் (வயது 44), மணிகண்டன் (வயது 48), கார்த்திக் (வயது 42) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
News April 7, 2026
சிவங்கை : இனி GOVT ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: ன்ஸ்ட்ல்
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE IT
News April 7, 2026
சிவகங்கை: மாணவிகளுக்கு ₹35,000.. அசத்தல் அரசு திட்டம்

Ph.D மாணவிகளுக்கு சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹35,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 40-க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறை அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. விண்ணப்பிக்க இங்கே <


