News January 11, 2026
சிவகங்கை: பாதயாத்திரை சென்ற பெண் பரிதாப பலி

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே ஒரு குழுவினர் நேற்று முன்தினம் பழனிக்கு பாதயாத்தரை சென்றனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனம் இந்த குழுவினர் மீது மோதியது. இந்த விபத்தில் பரமக்குடி பகுதியை சேர்ந்த வைஜெயந்திமாலா (35) என்ற பெண் படுகாயமடைந்தார். அவர் மதுரை G.H-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News January 27, 2026
சிவகங்கை: NO EXAM.. ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <
News January 27, 2026
மானாமதுரையில் இளைஞர் கைது..!

மானாமதுரை பகுதியில் தொடர்ச்சியாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் வகையில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு சிவகங்கை பகுதியை சேர்ந்த விஜய் (23) என்பவரை கைது செய்தனர்.
News January 27, 2026
சிவகங்கை: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <


