News July 4, 2024
சிவகங்கை பள்ளிகளில் அழுகிய முட்டைகளால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் 1293 பள்ளிகளில் சத்துணவு மையங்களுக்கு ஒதுக்கிய முட்டை அழுகியதால் மைய பொறுப்பாளர்கள் தவிப்பில் உள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு முட்டைகளை வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். இதுவரை அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என ஆட்சியர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News May 8, 2025
ரூ.1 லட்சம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

பூவந்தி அருகே கிளாதரி கக்ணாம்பட்டியை சேர்ந்த குமார், முத்துகருப்பி தம்பதியினர் தனது குழந்தைகளின் காதணி விழாவிற்காக ரூ.1 லட்சம் பணத்தை சேமித்து ஒரு தகர டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதை பார்க்கும் பொழுது பணம் கரையான்களால் பறிக்கப்பட்டிருந்ததை கண்டு வேதனை அடைந்தனர். இதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தம்பதியை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் வழங்கினார்.
News May 7, 2025
சிவகங்கை: காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

ஆஷிஷ் ராவத் ஐபிஎஸ் – 04575-240427 (எஸ்.பி)
பி.கலைகதிரவன் – 04575-243244 (ஏ.டி.எஸ்.பி)
எல்.பிரான்சிஸ் – 04575240587 (ஏ.டி.எஸ்.பி)
சி.உதயகுமார் – 9498164247(ஏ.டி.எஸ்.பி)
திருப்பத்தூர் – 04577-26213 (டி.எஸ்.பி)
தேவக்கோட்டை- 04561-273574 (டி.எஸ்.பி)
காரைக்குடி – 04565-238044 (டி.எஸ்.பி)
மானாமதுரை- 04574-269886 (டி.எஸ்.பி)
சிவகங்கை – 04575-240242 (டி.எஸ்.பி) *ஷேர் பண்ணுங்க
News May 7, 2025
சிவகங்கை மாவட்டத்தில் 4 ரயில் நிறுத்தம்

கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க