News January 28, 2026
சிவகங்கை: தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு

காளையார்கோவில் அருகே மாடுகம்மாய் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது உறவினரான கல்பனா என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார், செல்வராஜ் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். இதனைப் பார்த்த ஜெயபாலன் பெண்ணிடம் ஏன் இவ்வாறு தகராறு செய்கிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் (ம) செல்வராஜ் ஜெயபாலனை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு.
Similar News
News February 5, 2026
சிவகங்கை: சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமானது, வருகின்ற 7.2.2026 அன்று கல்லல் வட்டாரத்திற்குட்பட்ட குன்றக்குடி, தருமைக் கயிலைக் குருமணி (DKG) மேல்நிலைப்பள்ளியில் மற்றும் கண்ணங்குடி வட்டாரத்திற்குட்பட்ட டி.சிறுவனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
மானாமதுரை: பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.!

மானாமதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி, மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிப்.2 ம் தேதி, செம்பராயனேந்தல் ஆற்றுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பதினெட்டான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் (20), மாணவியை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான புகாரில், மானாமதுரை போலீசார் சந்தோஷை தேடி வருகின்றனர்.
News February 5, 2026
சிவகங்கை: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இனி NO டென்ஷன்!

சிவகங்கை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<


