News December 18, 2025

சிவகங்கை: தந்தை மூளைச்சாவு.. குடும்பத்தார் நெகிழ்ச்சி செயல்

image

சிங்கம்புணரி அருகே ஏரியூரைச் சேர்ந்த கட்டட பொறியாளர் எஸ்.குமரப்பன் (55) மூளைச்சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மகன்கள் தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிச.16ல் மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தினர் சம்மதத்துடன் குமரப்பனின் கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டது.

Similar News

News December 27, 2025

சிவகங்கை: துப்புரவு பணியாளர் கீழே விழுந்து உயிரிழப்பு

image

சிவகங்கை நகராட்சி மற்றும் அரசு மருத்துவமனை பகுதிகளில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த அபிமன்னன் (45), அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைக்குச் சென்ற போது இட்லி துணியை காய வைக்கும் போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 27, 2025

சிவகங்கை: 13 வயது சிறுவன் மீது மோதிய டூவீலர்

image

காளையார் கோவில் அருகே உள்ள செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவரின் 13 வயது மகன், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காளீஸ்வரி காளையார் கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 27, 2025

சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!