News March 17, 2026

சிவகங்கை: டிப்போவில் இன்னும் அகற்றப்படாத பதாகை

image

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் விதிமுறையாக அரசியல் கட்சி தலைவர்களின் பதாகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பேருந்து பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பலகை இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி அதனை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News March 29, 2026

சிவகங்கை: செல்போன் யூஸ் பண்ணுறீங்களா? எச்சரிக்கை.!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News March 29, 2026

BIG BREAKING: சிவகங்கை மாவட்ட தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. இதைத்தொடர்ந்து தவெகவின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் சற்று முன் அறிவித்தார். அதில், சிவகங்கை மாவட்டத்தில்

காரைக்குடி – T.K.பிரபு

திருப்பத்தூர் – ஶ்ரீனிவாச சேதுபதி

சிவகங்கை – குழந்தை ராணி நாச்சியார்

மானாமதுரை – D.இளங்கோவன்

ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

News March 29, 2026

சிவகங்கை: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

சிவகங்கை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD செயலி<<>> (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!