News December 28, 2025

சிவகங்கை: காலிப் பணியிடங்கள் அறிவிப்பு – கலெக்டர்

image

சிவகங்கை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள குழந்தை உதவி மையத்தின் ஆற்றுப்படுத்துநா் ஒரு பணியிடம், வழக்குப் பணியாளா் ஒரு பணியிடம் ஆகியவை ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 131, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 30, 2025

சிவகங்கை: பண பரிமாற்றம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை<> இங்கே கிளிக்<<>> செய்து சரிபார்த்து கொள்ளலாம். SHARE IT

News December 30, 2025

சிவகங்கை: உங்க நிலத்தை காணவில்லையா?

image

சிவகங்கை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News December 30, 2025

சிவகங்கையில் 123 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

image

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் சிறையில் அடைத்து வருகின்றனர். இந்த ஆண்டு (2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் 123 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!