News February 9, 2026

சிவகங்கை: எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

image

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சோலை நகரை சேர்ந்தவர் கார்த்திகை சாமி (வயது 53). இவர் காளையார்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் அனுமதியின்றி காளையார்கோவில் – தொண்டி சாலையில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News February 16, 2026

சிவகங்கை : உங்களுக்கு ரூ.5,000 வரலையா? – APPLY லிங்க் !

image

சிவகங்கை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களுடன் மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

News February 16, 2026

JUST IN: அஜித்குமார் வழக்கில் 4 உயர் அதிகாரிகள் கைது.?

image

மடப்புரம் அஜித்குமார் வழக்கில், நகையை அஜித் எடுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை என மதுரை ஐகோர்ட் கிளையில் CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அஜித்குமாரின் மரண வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றம் 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், குற்ற பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள 4 உயர் அதிகாரிகளையும் கைது செய்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

News February 16, 2026

JUST IN: அதிகாரிகள் உத்தரவிட்டால் அடித்துக் கொல்வதா.? நீதிபதி

image

மடப்புரம் அஜித்குமார் வழக்கில், சிறையில் உள்ள காவலர்கள் ஜாமீன் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. காவல்துறையினர் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என்றும், உயர் அதிகாரி உத்தரவிட்டால் அடித்துக் கொல்வதா? சட்டவிரோதமாக செயல்பட முடியாது என சொல்லுங்கள் எனவும், உங்கள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!