News December 9, 2025
சிவகங்கை: இலவச தையல் மிஷின் – ஆட்சியர் அழைப்பு!

சிவகங்கை மாவட்டம், தகுதியுடைய முன்னாள் படைவீரர் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் ஆகியோர் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வருகின்ற 15.12.2025 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2026
சிவகங்கை: மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

சிவகங்கை மாவட்டம், சாத்தரசன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி காண்டீபன். இவரது மனைவி சாந்தி. இருவரும் குடும்பத்துடன் ஆடு, மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் சாந்தி தனது வீட்டின் அருகே உள்ள முள்வேலியில் மாட்டை கட்ட சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
News April 8, 2026
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்திற்கான நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர், தேர்தல் செலவினப் பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர்களிடம் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 7603826476, 9345334941, 7338852070 என்ற அலைபேசி எண்களின் வாயிலாக தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News April 8, 2026
BREAKING: சிவகங்கை வரும் தவெக தலைவர் விஜய்!

சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் வரும் ஏப்.10ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் வந்து அங்கிருந்து கார் மூலம் காரைக்குடி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிரசாரத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்காத நிலையில், விஜய் பிரசாரம் செய்யும் இடத்தை காரைக்குடி வேட்பாளர் பிரபு மாவட்ட எஸ்.பி-யுடன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.


