News November 22, 2025

சிவகங்கை: இலவச ஆதார்; யூஸ் பண்ணிக்கோங்க!

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டத்தில் 12 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு காரைக்குடி, அழகப்பாபுரம், செக்காலை, கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், மானகிரி, தேவகோட்டை, ராம்நகர், நெற்குப்பை, உலகம்பட்டி, சிங்கம்புணரி ஆகிய அஞ்சல அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என காரைக்குடி கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 23, 2025

JUST IN சிவகங்கை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை வருகிறது. இந்நிலையில் சிவகங்கை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், நாளை (நவ 24) விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. இதனை எல்லோருக்கும் ஷேர் செய்யுங்க.

News November 23, 2025

சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சிவகங்கை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 23, 2025

சிவகங்கை: தம்பி வெட்டிக் கொலை.. அண்ணன் கைது

image

கிழவனூர் பகுதியைச் சேர்ந்த சற்குணம் (53) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில், சற்குணத்தின் அண்ணன் கருப்பையா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அரியராஜ், மாதவன் ஆகியோருக்கு இடையே முன்கூட்டியே இடத் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இந்தத் தகராறை முன்னிட்டு தான் இந்தக் கொலை நடந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அரியராஜ் மற்றும் மாதவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!