News February 19, 2026
சிவகங்கை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (18.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 21, 2026
சிவகங்கை : இலவச வக்கீல் சேவை Whatsapp எண்…!

சிவகங்கை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News February 21, 2026
சிவகங்கை: விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் பலி.!

முளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவவீரர் கண்ணன். இவருக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. விடுப்பில் ஊருக்கு வந்த அவர் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ராமலிங்கம்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற பைக்கில் மோதி கீழே விழுந்ததில் பின்னால் வந்த கார் அவர் மீது மோதி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 21, 2026
சிவகங்கை: நீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

செண்பகம்பேட்டையைச் சேர்ந்த கருப்பாயி (வயது 78), வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அவர் ஊருணி பகுதிக்கு சென்றது தெரிந்தது. தீயணைப்பு துறையினர் ஊரணியில் இறங்கி தேடியபோது இறந்த நிலையில் அவர் மீட்கப்பட்டார். கீழச்சீவல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


