News December 28, 2025
சிவகங்கை: இனி Whatsapp மூலம் தீர்வு!

சிவகங்கை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
Similar News
News February 10, 2026
சிவகங்கை: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா சிவகங்கை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04575-240524 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News February 10, 2026
சிவகங்கை: நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

மானாமதுரை, கல்லல் துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மானாமதுரை, SIPCOT, இராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, கல்லல், சிறுவயல், குருந்தம்பட்டு, குறிச்சி, மாலைகண்டான், வெற்றியூர், சாத்தரசம்பட்டி, செம்பனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News February 10, 2026
சிவகங்கை: 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டம், கிருங்காக்கோட்டையை சேர்ந்த பெரியண்ணன் மகள் தர்ஷிகா (16). இவர் முட்டாக்கட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி அடிக்கடி செல்போன் பார்ப்பதை பெற்றோர்கள் கண்டித்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்கம்புணரி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


