News August 8, 2024

சிவகங்கை அருகே பட்டிமன்ற பேச்சாளருக்கு விருது

image

கண்டரமாணிக்கம் அருகே தெற்குபட்டி மாணிக்க நாச்சி அம்மன் கோவிலில், பட்டிமன்ற பேச்சாளர் தேவகோட்டை ராமநாதனுக்கு உலக தமிழ் பறவை என்னும் பட்டய விருதையும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் ஆன பொற்கிழியையும் பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ பிச்சை குருக்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள் கல்வி நிறுவனங்கள், ஊர் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 19, 2025

சிவகங்கை: மருத்துவக் கழிவு ஆலை பணிகள் நிறுத்தம்

image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொதுமக்களின் கடும் எதிா்ப்பு காரணமாக சிவகங்கை கோட்டாட்சியா், மற்றும் வட்டாட்சியா் ஆகியோா் போராட்டக் குழு நிா்வாகிகளிடம் ஆலையை மூடுவதாக உறுதியளித்தனா். இரு தரப்பினரும் அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டனா். இதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. எனவே
மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமான பணிகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டன.

News September 18, 2025

சிவகங்கை: நெருங்கும் பருவமழை இது ரொம்ப முக்கியம்..!

image

சிவகங்கை மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News September 18, 2025

சிவகங்கையில் சிறப்பு முகாம் தேதியை அறிவித்த கலெக்டர்

image

தமிழக முதல்வரின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமானது, வருகின்ற 20.9.2025 அன்று காளையார்கோவில் ஹோலி ஸ்பிரிட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறவுள்ள முகாமினை பயன்படுத்திக் கொண்டு, தங்களது உடல்நலத்தினை முறையாக பேணிக்காத்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்

error: Content is protected !!