News September 9, 2025
சிவகங்கையில் வீடு புகுந்து செயின் பறிக்க முயற்சி

சிவகங்கை அருகே வண்டவாசியை சேர்ந்தவர் தனஸ்ரீ(22). இவர் வீட்டில் குழந்தையுடன் இருந்த போது ஒரு பெண் தண்ணீர் கேட்டு வந்துள்ளார். தண்ணீர் கொடுத்தபோது அந்த பெண் தனஸ்ரீ கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட தனஸ்ரீ வீட்டின் கதவை மூடினார்.கதவை திறக்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவதாக அப்பெண் மிரட்டிய நிலையில் கதவை திறந்த நிலையில் அவர் தப்பியோடினார்.
Similar News
News September 9, 2025
சிவகங்கை மாவட்ட மக்களின் கனிவான கவனத்திற்கு..!

ஹூப்ளி – ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை, அக்டோபர் மாத முதல் இறுதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பூஜா விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தேவை உள்ள பயணிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலானது சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, கரூர், சேலம் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. SHARE IT..!
News September 9, 2025
BREAKING சிவகங்கை வரும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி நவ.29 அன்று சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
News September 9, 2025
சிவகங்கை மக்களே உங்க பிரச்சனைக்கு ஒரே இடத்தில் தீர்வு

சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை (10-09-25) நடக்கிறது இம்முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், கடனுதவி உட்பட நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் சேவைகள், அதற்கான ஆவணங்கள், முகாம் நடைபெறும் இடங்களை<