News April 4, 2025
சிவகங்கையில் போலீசிடமே திருட்டு

சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிபவர் சுரேஷ்குமார் 40. இவர் காரைக்குடியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கிறார். இவர் பணி முடித்து தனது டூவீலரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே நிறுத்திவிட்டு காரைக்குடிக்கு ரயிலில் சென்றார். திரும்பி வந்தபோது இவரது டூவீலரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கடந்த ஒரு மாதத்தில் 20க்கு மேற்பட்ட டூவீலர்கள் திருடு போய் உள்ளது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News April 8, 2026
சிவகங்கை: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் அரசு வேலை.!

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News April 8, 2026
சிவகங்கை: பெண்ணிடம் ஆசை காட்டி மோசடி.!

தேவகோட்டை அண்ணாநகரை சேர்ந்த 37 வயது பெண்ணிடம் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அலைபேசியில் பேசியுள்ளனர். அதில் கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதை நம்பிய அப்பெண் அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.89 ஆயிரத்து 125-ஐ செலுத்தியுள்ளார். பின்னர் கடன் கிடைக்காததால், மோசடியை அறிந்து சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
News April 8, 2026
காரைக்குடி: காவல் நிலையத்தில் கைவரிசை காட்டிய கும்பல்.!

காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் மணல் கடத்தியதாக வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அந்த லாரி திடீரென மாயமானது. இதுகுறித்து எஸ்.ஐ கார்த்திகேயன் புகார் அளித்த நிலையில், காவல் நிலையத்தில் நின்றிருந்த லாரியை கடத்தியதாக கணேசபுரம் செந்தில்குமார் (வயது 44), மணிகண்டன் (வயது 48), கார்த்திக் (வயது 42) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்


