News March 22, 2025

சிவகங்கையில் தேனீக்கள் கொட்டி ஒருவர் பலி

image

தேவகோட்டையை சேர்ந்தவர் ஆரோக்கிய சாமி. இவர் வீட்டில் மரத்தை வெட்ட உடப்பன்பட்டியை சேர்ந்த காளிமுத்து வந்தார். மரத்தை வெட்டிய போது மரத்திலிருந்து வெளியேறிய மலை தேனீக்கள் காளிமுத்துவைக் கொட்டின. வீட்டின் வெளியே நின்றிருந்த ராஜாமுகமது அவரது மனைவி, மகன் ஆகியோரை தேனீக்கள் கொட்டியது.இதில் ராஜா முகமது மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Similar News

News August 19, 2025

சிவகங்கை: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

image

சிவகங்கை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப்.11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <>இங்கே கிளிக் <<>>செய்யவும்.

News August 19, 2025

சிவகங்கை: இலவச கேஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிங்க!

image

சிவகங்கை மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள கிராமிய பயிற்சி மையத்தில் இன்று (ஆக.19) காலை 10:30 மணி அளவில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் கூட்டுறவு துறை அமைச்சர் K.R.பெரியகருப்பன் கருத்தரங்கு பேருரையாற்ற உள்ளார். இக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

error: Content is protected !!