News March 30, 2025

சிவகங்கையில் சிறு நீரக பாதிப்பு அதிகரிப்பு; ப.சிதம்பரம் கவலை

image

சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சிறுநீரக பாதிப்பு அதிகரித்துள்ளது. இது எதனால் வருகிறது என தெரியவில்லை.குடிநீர் காரணமா அல்லது தட்பவெப்ப நிலை காரணமா என தெரியவில்லை. சிவகங்கையில், டயாலிசிஸ் இயந்திரம் தொடர்ந்து கொடுத்தாலும், டயாலிசிஸ் மிஷின்களின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 1, 2025

தொழில் முனைவோர்கள் பதிவு செய்யலாம் – ஆட்சியர்

image

ஈரோடு மாவட்டம் ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழிற் கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://forms.gle/fZPDgyWUToAAUobt7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

சிவகங்கையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 1, 2025

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை

image

சிவகங்கை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பணியிடத்திற்க்கு 1 காலிபணியிடம் உள்ளது. ஏதாவது ஒர் பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழஙகப்படும். விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். <>இந்த லிங்க்ல்<<>> குறிப்பிட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் SDAT-Sports District Centre-க்கு ஏப்ரல்.3 ல் செல்லவும்

error: Content is protected !!