News September 7, 2025

சிவகங்கையில் காவலர் தின வீரவணக்கம்

image

சிவகங்கை: செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அரசாணை பிறப்பித்தார். அதன்படி செப்டம்பர் 6, நேற்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களை போற்றும் விதமாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அவர்கள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

Similar News

News September 8, 2025

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இதுவரை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் புறப்பட்ட ரயில் எண் 16751 தினசரி போட் மெயில் ரயில்
செப்.11 முதல் நவ.10 வரை தாம்பரத்தில் இருந்து  மாலை 7:42 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News September 8, 2025

காரைக்குடி காவல் நிலையத்தில் ரகளை

image

காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவலர்கள் மனுக்களை விசாரித்தனர். அதில் குடும்ப பிரச்சினை தொடர்பாக வந்திருந்த 2 தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதை ஆய்வாளர் செல்வி, பெண் காவலர்கள் தடுக்க முயன்றனர். ஆனால், இரு தரப்பினரும் கீழே தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆய்வாளர் செல்வி அளித்த புகாரின்பேரில், இரு தரப்பிலும்13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 8, 2025

திருப்புவனம்: இடி தாக்கியதில் பெண் உரிரிழப்பு

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரைச் சோ்ந்தவா் சிவகாமி அம்மாள்(50). இவா், நேற்று மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் அந்தப் பகுதியிலுள்ள சமையன் கோயில் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை அவிழ்ப்பதற்காகச் சென்றாா். அப்போது, இடி தாக்கியதில் சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

error: Content is protected !!