News September 8, 2025

சிவகங்கையில் இன்று முதல் கனமழை எச்சரிக்கை

image

தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று(செப்.8) முதல் நாளை மறுநாள் (செப்.10) வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று, நாளை தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், நாளை மறுநாள் தேனி, மதுரை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT

Similar News

News September 8, 2025

சிவகங்கை: குவியும் வேலைவாய்புகள் APPLY NOW!

image

சிவகங்கை மக்களே,

▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login

▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php

▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/

▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/

▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/

மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 8, 2025

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இதுவரை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் புறப்பட்ட ரயில் எண் 16751 தினசரி போட் மெயில் ரயில்
செப்.11 முதல் நவ.10 வரை தாம்பரத்தில் இருந்து  மாலை 7:42 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News September 8, 2025

காரைக்குடி காவல் நிலையத்தில் ரகளை

image

காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவலர்கள் மனுக்களை விசாரித்தனர். அதில் குடும்ப பிரச்சினை தொடர்பாக வந்திருந்த 2 தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதை ஆய்வாளர் செல்வி, பெண் காவலர்கள் தடுக்க முயன்றனர். ஆனால், இரு தரப்பினரும் கீழே தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆய்வாளர் செல்வி அளித்த புகாரின்பேரில், இரு தரப்பிலும்13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!